லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் போர் நிறுத்தத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதா?

Share

இடதுபுறம் - இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் வலதுபுறம் - இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக இரான் கூறியுள்ளது (படத்தில், இடதுபுறம் – இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் வலதுபுறம் – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு).

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்து 24 மணிநேரமே ஆகியுள்ள நிலையில், அந்த அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தெளிவாகத் தெரிகின்றன.

லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதும் இந்த போர்நிறுத்த நிபந்தனைகளில் அடங்கும் என்று இரானும், மத்தியஸ்த நாடாகச் செயல்பட்ட பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.

ஆனால், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துவது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் லெபனானில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் தொடங்கியதிலிருந்து ஹெஸ்பொல்லாவுக்கு ஏற்பட்ட “மிகப்பெரிய பின்னடைவு” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களை விவரித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com