பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்கு நேற்று வருகை தந்து, அங்கு நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஐரோப்பாவில் இருக்கும் இந்த பாரம்பரிய கற்கோயிலில், இந்து மரபுகளின்படி அவர்கள் வழிபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
கோயிலுக்கு வருகை தந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.