`ரூ.1 லட்சம் இழப்பீடு’ – மகப்பேறு விடுப்பு மறுத்த மாவட்ட நீதிபதியை கண்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

Share

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தன் கணவர் இறந்த பின்பு மனுதாரர், ஆண் நண்பருடன் லிவ் இன் உறவு முறையில் வாழ்ந்துள்ளார். திருமணம் செய்துகொள்ள ஆண் நண்பர் உறுதி அளித்ததால், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் திருமணத்துக்கு முன் கருவுற்றார்.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

ஆனால், ஆண் நண்பர் மனுதாரரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதுகுறித்து புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்ய, அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற ஆண் நண்பரிடம் தெரிந்தவர்கள் அறிவுரை கூறியதைத் தொடர்ந்து மனுதாரரை திருமணம் செய்துள்ளார். இதற்கான திருமண அழைப்பிதழ், திருமண புகைப்படங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

திருமணம் செய்துகொள்ளாமல் தம்பதியராக வாழும் “லிவ் இன்’ முறையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அப்படியுள்ள சூழலில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பழமைவாத சிந்தனையுடன் மனிதத்தன்மையற்ற முறையில் செயல்பட்டுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com