இதனால் பேருந்து நிலையத்தின் வடக்கு நுழைவு வாயில் பகுதியில் விழா நாளுக்கு முந்தைய இரவில் அவசர அவசரமாகப் பெயரை எழுதியுள்ளனர். மற்றொரு நுழைவு வாயிலான மேற்கு பகுதியில் அதையும் எழுதவில்லை.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ”சேதுபதி மன்னர்கள் அரசுக்கு வழங்கிய இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு சேதுபதி மன்னரது பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளனர்.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.
இதே போல் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட்டதற்கு தென் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தப் பெயர் பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.