இதேபோல் உடல் தகுதி குறித்து அப்டேட்டை அஜித் அகர்கருக்குக் கொடுப்பது என்னுடைய வேலை கிடையாது.
இது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிர்வாகிகள், மருத்துவர்கள் கொடுக்க வேண்டும். அதை அவர்கள்தான் செய்ய வேண்டும் தவிர, அது என்னுடைய பிரச்னை கிடையாது.
நான் எப்போதும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எப்போதும் அணிக்காகச் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்யுங்கள்.

நான் தொடர்ந்து களத்தில் போராடுவேன். தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவேன்.
நான் களத்தில் நன்றாக விளையாடினால் நிச்சயம் எனக்கு நல்லது நடக்கும். எனினும் அணிக்குத் தேர்வாகுவது என்பது எனது கையில் இல்லை.
நான் போட்டியில் விளையாடுவதற்காகத்தான் தயாராக முடியும். என்னை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றாலும் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை.
நான் என்னுடைய பெங்கால் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.