யுக்ரேன் போர்: ரஷ்யாவுக்கு எதிரான டிரம்பின் அறிவிப்பு இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

Share

அமெரிக்கா - ரஷ்யா, யுக்ரேன், புதின், டிரம்ப், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் மூலம் யுக்ரேனுக்கு “உயர் தர ஆயுதங்களை” அனுப்பப் போவதாக அறிவித்துள்ளார்.

50 நாட்களுக்குள் யுக்ரேன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

“யுக்ரேனால் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்”என்று வாஷிங்டனில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் கூறினார்.

“நேட்டோ வழியாக யுக்ரேனுக்குத் தேவையானவற்றை பெருமளவில் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான செலவை ஐரோப்பிய நாடுகள் ஏற்கும்”என்பதை ருட்டே உறுதிப்படுத்தினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com