பீகாரில் ரயிலில் யாசகம் எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது யாசகம் எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்திருக்கிறார். அந்த பெண்ணிடம் பயணிகள் சிலர் தவறாகப் பேசியும், ஒருசிலர் தவறாக நடந்துகொள்ளவும் முயற்சி செய்திருக்கின்றனர். இதனால் அந்தப் பெண் பெரும் சங்கடமாக உணர்ந்திருக்கிறார்.