மும்பை: தினசரி ரூ.30-க்கு பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.70,000 ஊதியம்- கனவு நனவானது எப்படி?

Share

தூய்மை பணியாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

“சமுதாயத்தின் ஒரு பிரிவுக்கு இழப்பு ஏற்படுத்தி மற்றொரு பிரிவுக்கு தூய்மையான சூழலை தரும் சமூக அமைப்பு ஏதும் இருக்கக் கூடாது.”

மும்பையை தினமும் தூய்மைப்படுத்தும் 580 தூய்மைப் பணியாளர்களை நிரந்தப் பணியாளர்களாக நியமித்து, 2023ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மிலிந்த் ஜாதவ் உத்தரவு பிறப்பித்தபோது கூறிய வார்த்தைகள் இவை.

இதன்மூலம், சுமார் 25 ஆண்டுகள் போராடிய பணியாளர்களின் போராட்டம் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முடிவுக்கு வந்ததாக தெரிந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை மாநகராட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

1996 ஆம் ஆண்டு முதல் தங்களது உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் 580 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நின்று நீதிமன்றத்தில் வாதாடிய தொழிலாளர் சங்கமும் (கச்ரா வஹாதுக் ஷ்ரமிக் சங்) நம்பிக்கை இழக்காமல் நீதிமன்றத்தில் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com