இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2018-ம் ஆண்டு முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே ஷமி மீது குடும்ப வன்முறை, கொலை முயற்சி, மற்றும் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக ஹசின் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, அவர் மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் கோரியிருந்தார். அந்த 10 லட்சத்தில் ரூ.7 லட்சம் தனது செலவுகளுக்கும், ரூ.3 லட்சம் மகளின் பராமரிப்பிற்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.