அதிரடி ஓப்பனிங்… நிதான ஃபினிஷிங்!
அதைத்தொடர்ந்து, 172 ரன்கள் என்ற இலக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இறங்கிய அபிஷேக் சர்மா, சுப்மன் கில் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ஆடினர்.
ரன்ரேட் 10-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொண்டு இந்தக் கூட்டணியில் அபிஷேக் சர்மா அரைசதம் அடிக்க, 9 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்தியா.

அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த கில் அடுத்த ஓவரிலேயே 47 ரன்களில் அவுட்டானார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதற்கடுத்த ஓவரிலேயே 0 ரன்னில் அவுட்டானார். அதன்பின்னர் இந்தியாவின் ரன் வேகமும் மெதுவானது.

அடுத்தடுத்து இரண்டு மூன்று ஓவர்களில் அபிஷேக் ஷர்மாவும் (74), சஞ்சு சாம்சனும் (13) அவுட்டானாலும் நிதானமாக ஆடிய திலக் வர்மா 19-வது ஓவரில் வின்னிங் ஷாட் 4 அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
லீக் போட்டியைப் போலவே இப்போட்டியிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கவில்லை.
5 சிக்ஸ், 6 ஃபோருடன் 74 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.