மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு | Asian Surfing Championships to be held in Mamallapuram

Share

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் நடத்​தப்பட உள்​ளது. இந்த போட்​டியை தமிழக அரசு மற்​றும் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு வாரி​யம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செல​வில் நடத்​துகிறது. இந்​தத் தொடரில் இந்​தி​யா, ஜப்​பான், கொரி​யா, குவைத், லெப​னான், சவுதி அரேபி​யா, சீன தைபே, உஸ்​பெகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட 20 ஆசிய நாடு​களைச் சேர்ந்த வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர்.

இவர்​கள் ஷார்ட்​போர்டு பிரிவு​களில் போட்​டி​யிடு​வார்​கள். ஓபன் பிரி​வில் ஆடவர், மகளிர், 18 வயதுக்​குட்​பட்ட சிறு​வர், மற்​றும் 18 வயதுக்​குட்​பட்ட சிறுமியர் பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெறும். வெற்றி பெறு​பவர்​களுக்கு தங்​கம், வெள்​ளி, வெண்​கலம் மற்​றும் தாமிரம் பதக்​கங்​கள் வழங்​கப்​படும். இந்​தத் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜப்​பானில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிக்​கான இறுதி தகுதி சுற்று போட்​டி​யாக அமைந்​துள்​ளது. மேலும் ஷார்ட்​போர்டு பிரி​வில் முதலிடம் பெறும் வீரர், வீராங்​கனை 2025-ம் ஆண்டு நடை​பெற உள்ள உலக அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் போட்​டிக்கு தகுதி பெறு​வார்​கள்.

இந்​நிலை​யில் ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் அறி​விப்பு நிகழ்ச்சி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் இந்​திய வீரர், வீராங்​க​னை​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். நிகழ்ச்​சி​யில் இந்​திய அலைச்​சறுக்கு சங்​கத்​தின் தலை​வர் அருண் வாசு, தமிழ்​நாடு அலைச்​சறுக்கு சங்​கத்​தின் துணைத்​தலை​வர் வீர​பாகு மற்​றும் எஸ்​டிஏடி அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

இந்​திய அணி விவரம்: ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப்​பில் பங்​கேற்​கும் இந்​திய அணி​யில் 12 பேர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் 8 பேர் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

ஸ்ரீகாந்த், கிஷோர் குமார், கமலி மூர்த்​தி, சிருஷ்டி செல்​வம், தயின் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் (தமிழ்​நாடு), ரமேஷ் புதி​கால் (கேரளா), சுகர் சாந்தி பனாரஸ் (கோ​வா), ஆத்​யா சிங்​, சான்​வி ஹெக்​டே (கர்​நாட​கா).

செய்தித் துளிகள்:

  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் எனவும் 20 மற்றும் 29-ம் தேதி பதக்க போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் சவுத்தாம்ப்டன் நகரில் இன்று நடைபெறுகிறது.
  • சென்னையில் நடைபெற்று வரும் எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் ஐஓசி 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் நேஷனல் அணியையும், இந்தியன் ரயில்வே 6-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியையும் தோற்கடித்தன.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com