மத வன்முறை அதிகமில்லாத நாக்பூரில் திடீரென வன்முறை நிகழ்ந்தது ஏன்? யார் காரணம்? பிபிசி கள ஆய்வு

Share

நாக்பூர் வன்முறை

பட மூலாதாரம், ANI

  • எழுதியவர், பாக்யஶ்ரீ ராட், ஆஷே யேக்டே
  • பதவி, பிபிசி மராத்தி

நாக்பூரில் மார்ச் 17ஆம் தேதி இரவு நடந்தது என்ன என்பது பலருக்கும் புரிந்துகொள்ள முடியாதது. மத வன்முறை வரலாறு அதிகமில்லாத இல்லாத இந்த நகரில் 2 குழுக்களிடையே திடீரென கல்வீச்சு தொடங்கியது. தீவைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

அமைதி நிலவ வேண்டும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசும், உள்ளூர் காவல் அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் நடந்த மறுநாள் கடைகள் மூடப்பட்டிருந்தன, வன்முறை கும்பலால் எரிக்கப்பட்ட கார்கள் நின்றுகொண்டிருந்தன. சம்பவ இடத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாக்பூரின் காந்தி கேட் முதல் ஆக்ராசென் சவுக், சக்கரதாரா, கணேஷ்பேட்டை வரை மத்திய நாக்பூர் முழுவதுமே சந்தைப் பகுதி என்பதால், அங்குள்ள அனைத்து தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com