மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்

Share

காணொளிக் குறிப்பு,

மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்

மகாராஷ்டிராவில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை ஒருவர் ஓடிச்சென்று பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

டோம்பிவிலி பகுதியில் உள்ள 13 மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடி பால்கனியின் திறந்திருந்த இரும்புக் கதவு வழியாக ஒரு குழந்தை தவழ்ந்து வந்து தொங்கி பின் கீழே விழுந்ததாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த நபர் கூச்சல் கேட்டு நொடிப் பொழுதில் ஓடிச் சென்று குழந்தையைக் காப்பாற்றும் காணொளி வெளியானதும் இந்நபருக்கு பாராட்டுகள் குவிந்தன.

குழந்தையை காப்பாற்றிய கிரிக்கெட் வீரரான பாவேஷ் மாத்ரே ஒரு கிரிக்கெட் வீரர், தனது நண்பரைப் பார்த்துவிட்டு அந்தக் கட்டடத்தை விட்டு வெளியேறும்போது குழந்தை ஒன்று மூன்றாவது மாடியில் இருந்து விழுவதாக யாரோ கத்தியதாகவும் அதைக் கேட்டு உடனே ஓடிச் சென்று காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com