எனவே, இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டு ரிசர்வ் நாளிலும் மழையால் கைவிடப்பட்டால் புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்காவை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அதேபோல், ஆஸ்திரேலியா vs இந்தியா போட்டி மழையால் நடத்த முடியாமல் போனால் இந்தியாவை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

மேலும், மழையால் இறுதிப்போட்டி நடத்த முடியாத சூழல் உருவானால் மேற்குறிப்பிட்ட விதிகள் பின்பற்றப்பட்டுக் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா போட்டியன்று கவுகாத்தியில் 33 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஆஸ்திரேலியா vs இந்தியா போட்டியன்று நேவி மும்பையில் 50 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த இரண்டு போட்டியிலும் மழை வரும்பட்சத்தில் தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் மழையுடனும் போராட வேண்டியிருக்கும்.