நெல் கொள்முதல் செய்வது போல, கரும்புகளையும் கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பணத்தை முறையாக செலுத்த வேண்டும். இந்த வருடம் குறைந்தபட்சமாக 40 ரூபாய்க்கு ஒரு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்தாண்டு தமிழக அரசு தரமற்ற வெல்லத்தை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெல்லம் வழங்குவதைப் பற்றி தமிழக அரசு ஒன்றும் பேசாதது வருத்தம் அளிக்கிறது.
தாமதமாக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். பொங்கல் தொகுப்பில் கட்டாயமாக பச்சரிசி, வெல்லம், கரும்புகள் வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மேலும் கரும்பு கொள்முதலில் நடந்த முறைகேடுகளை எதிர்கொள்ள முடியாததே இந்த அறிவிப்பின் தாமதத்திற்கு காரணம் ஆகும்” என்று பேசினார்.