தேவையானவை:
உடைத்த டிரை ஃப்ரூட்ஸ் அண்டு நட்ஸ் கலவை – அரை கப்
எண்ணெய் (அ) நெய் – பொரிக்க தேவையான அளவு
மேல் மாவு செய்ய:
மாவா (இனிப்பு சேர்க்காத கோவா) – ஒரு கப் (துருவவும்)
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்
ஆரோரூட் மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை
காய்ச்சி ஆறவைத்த பால் – தேவையான அளவு
பாகு செய்ய:
சர்க்கரை – ஒன்றரை கப்
தண்ணீர் – ஒரு கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
அலங்கரிக்க:
சீவிய பிஸ்தா, பாதாம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
ரோஜா இதழ்கள் – சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். மேல் மாவு செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். பிறகு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி தட்டி நடுவே சிறிதளவு டிரை ஃப்ரூட்ஸ் – நட்ஸ் கலவை வைத்து மூடி விருப்பமான வடிவம் கொண்டுவரவும்.
வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யைக் காயவைத்து, மிதமான சூட்டில் பேடாக்களைப் (பாட்டி) போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சற்று ஆறியதும் சர்க்கரைப் பாகில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து எடுக்கவும். அதன்மீது அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி அலங்கரித்து, மேலே சிறிதளவு பாகை ஊற்றிப் பரிமாறவும்.