இரண்டாவது சுற்றில் `லைவ் குக்கிங்’ செய்யப்பட்டது. பனீர் மசாலா, முட்டையுடன் சிக்கன் பிரியாணி, பனீர் 65, கோதுமை சம்பா சாம்பார், பனீர் தவா ஃபிரை, மாங்காய் பச்சடி, சாமை பனை வெல்லம், கொங்கு நாட்டு வெள்ளை குஷ்கா, வரகு அரிசி சிக்கன் பிரியாணி, பனீர் பரோட்டா, பனீர் வெஜ் குருமா என வகை வகையான ரெசிபிகளை செய்து அசத்தியிருந்தனர்.
கடும் போட்டி நிலவிய சூழலில், இறுதிப் போட்டிக்கு பவித்ரா, பர்மிளா, பிரவீன், மாலதி ஆகிய 4 பேரைத் தேர்வு செய்தார் செஃப் தீனா. இவர்களில் பிரவீன் என்கிற ஆண் போட்டியாளர் செய்த ரெசிபி ஒவ்வொன்றும் செஃப் தீனாவுக்கே சவால் விடும் விதமாக இருந்தது.
இதையடுத்து, சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அஸ்வின் ஸ்வீட்ஸ், பச்சையப்பாஸ் சில்க்ஸ், கோல்டு வின்னர், எக்ஸோ, லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா, ஜோஷ் ஆகிய ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. லைவ் குக்கிங்கில் கலந்துகொண்ட மற்ற 6 போட்டியாளர்களும் மேடை ஏற்றப்பட்டு அவர்களுக்கும் ஸ்பான்சர்கள் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. 2-வது சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 4 பேரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள்.