புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது – 4 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

Share

வடகிழக்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்படுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com