இதனைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பா.ஜ.க பெண்களுக்கு எதிரானது. பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி கூறியது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது அவரின் கேவலமான மனநிலையையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் சக எம்.பி-யை துஷ்பிரயோகம் செய்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, இதற்கு பிரியங்கா காந்தியிடம் ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கவேண்டும் வலியுறுத்தினார்.

அதேபோல், இந்தியா கூட்டணியில் சக கட்சியான ஆம் ஆத்மியின் எம்.பி சஞ்சய் சிங், “இது மிகவும் வெட்கக்கேடானது. நாடாளுமன்றத்தில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியவருக்கும், மக்களுக்கு வெளிப்படையாகப் பணம் விநியோகம் செய்தவருக்கும் பா.ஜ.க சீட் வழங்கியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களின் ஆட்சியில் தங்களுக்கு எத்தகைய பாதுகாப்பு கிடைக்கும் என்பதை டெல்லி பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.
இதே ரமேஷ் பிதுரிதான், கடந்த நாடாளுமன்றத்தில் அப்போதைய பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலிக்கு எதிராக வகுப்புவாத கருத்துக்களைப் பேசி எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களுக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.