பிகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணத்தை அலசும் தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ்

Share

தேர்தல் நடத்தை விதிகளின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது தவறு என்று யோகேந்திர யாதவ் கூறுகிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்தல் நடத்தை விதிகளின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது தவறு என்று யோகேந்திர யாதவ் கூறுகிறார்

பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களைத் தாண்டியுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் முடிவுகளின் போக்கு, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார் தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ். அவரிடம் பிபிசி இந்தி சேவையின் ஆசிரியர் நிதின் ஸ்ரீவஸ்தவா விரிவாகப் பேசியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறுவதற்கான காரணங்கள் என்ன?

யோகேந்திர யாதவிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, இந்தத் தேர்தல் முடிவுகளின் போக்கை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான்.

“பிகார் தேர்தல் முடிவுகளால் நான் ஏமாற்றம் கொண்டேன், சோர்வடைந்தேன். ஆனால், ஆச்சரியப்படவில்லை” என்று அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com