பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தின் தற்போதைய நிலவரம் என்ன? முழு விவரம்

Share

பாகிஸ்தான் ரயில் கடத்தலில் 104 பேர் மீட்பு, 16 ஆயுதக் குழுவினர் சுட்டுக் கொலை - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Mazhar Chandio/Anadolu via Getty Images

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் கடத்தியுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக பலூச் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாதக் குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாக அக்குழு கூறியுள்ளது.

இதற்கிடையில், பெண்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 104 மீட்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவிப்பதாக பிபிசி உருது செய்தி கூறுகிறது. மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதக்குழுவைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 80 பயணிகள் மச் ரயில் நிலையம் வந்தடைந்ததாகவும், அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com