“பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம்” – தாலிபன் அமைச்சர் முத்தக்கி கூறியது என்ன?

Share

இன்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் அமிர்கான் முத்தக்கி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இன்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் அமிர்கான் முத்தக்கி.

இந்தியா வந்துள்ள தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முத்தக்கி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுமென்றே யாரையும் தவிர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை.

பல பெண் பத்திரிகையாளர்கள் தங்களின் சமூக வலைதளத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நேரம் இன்று நடந்த முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பில் பல பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். மேலும் முத்தக்கியிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com