பாகிஸ்தானால் இந்தியா – செளதி அரேபியா உறவு பாதிக்கப்படுமா? ஓர் அலசல்

Share

பாகிஸ்தான் - சௌதி அரேபியா, இந்தியா

பட மூலாதாரம், @Spa_Eng

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் உத்திரீதியான பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

செளதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் குறித்த மிக முக்கியமான விவாதம் என்னவென்றால், ஒரு நாடு தாக்கப்பட்டால், அது மற்றொரு நாட்டுக்கு எதிரான தாக்குதலாகவும் கருதப்படும் என்பதுதான்.

இந்தியாவில் உள்ள பல ஆய்வாளர்கள் இதை மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ராணுவ மோதலின் பின்னணியில் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள், சமீபத்தில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் பின்னணியில் இதைப் பார்த்தனர்.

பிபிசி இந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான ‘தி லென்ஸ்’ தொடரில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் இயக்குனர் முகேஷ் சர்மா, பாகிஸ்தான் – செளதி அரேபியாவுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் குறித்து நிபுணர்களுடன் விவாதித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் அர்த்தம் என்ன? இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா உறவுகளில் ஒரு முக்கியமான படியாக இருக்கிறதா?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com