2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வழக்கம்போல குரூப் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியை வாசிம் அக்ரமும் விமர்சித்துப் பேசியிருக்கிறார். “பொறுத்தது போதும். இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே வீரர்களை வைத்துக்கொண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறோம்.

இந்த முறை தைரியமான நடவடிக்கையை எடுத்து இளம் வீரர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். பயமில்லாமல் ஆடும் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 அணியில் தேர்வு செய்யவேண்டும். ஐந்து அல்லது ஆறு வீரர்களை அணியை விட்டு நீக்கவேண்டி இருந்தாலும், அதைப்பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாம் தோல்விகளை மட்டுமே சந்திக்க நேரிடும்.