ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது உடல் தகுதியை நிரூபித்திருந்தபோதிலும், இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன்? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, ஷமிக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

சமீபத்தில், இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஷமி திறந்தவெளியில் பேசியிருந்தார்.
இந்நிலையில், ஷமி குறித்து பேசிய கங்குலி கூறியதாவது:
“ஷமி அபாரமாக பந்துவீசி வருகிறார். அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்.
நடந்து முடிந்த மூன்று ரஞ்சி போட்டிகளில் அவர் விளையாடிய விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம்.