நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”

Share

  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

நம்மாழ்வார்

பட மூலாதாரம், M Niyas Ahmed

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் கடல் தண்ணீர் புகுந்து நிலத்தடி நீர் பாழடைந்தது. ஏற்கெனவே கடன், லாபமின்மை, ஆட் பற்றாகுறையால் விவசாயிகள் தவித்து கொண்டிருந்தனர்.

நம்பிக்கை கீற்று

மெல்ல நினைவுகளை திரட்டி அசைப்போட்டோமானால் டெல்டாவில் விவசாயிகள் எலி கறி தின்ற காலமது. எங்கும் இருள் படிந்திருந்த நிலையில் சுனாமி அவர்களின் கவலையை இன்னும் தடிமனாக்கி இருந்தது. உப்பு தண்ணீரை கொண்டு இனி எப்படி விவசாயம் செய்ய என குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள வேறு வழிகளை தேடிய போது நம்பிக்கை ஒளிகீற்றாக நம்மாழ்வார் வந்தார். அந்த பகுதிகளில் சுழன்று சுழன்று வேலை பார்த்தார்.

இனி விவசாயமே செய்ய முடியாது என்று கைவிடப்பட்ட நிலங்களை பண்படுத்தினார். உப்பு பூத்த அந்த நிலத்தில் மெல்ல பச்சையம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது.

அதுவரை அவருக்கு செவிகொடுக்க மறுத்தவர்கள், அவரின் ஆலோசனைகளை மறுதலித்தவர்கள் அவரை தேட தொடங்கினார்கள். பலர் மெல்ல இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்பினார்கள். மரபு விதைகளை மீட்க புறப்பட்டார்கள்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com