தெருநாய்கள்: உச்ச நீதிமன்ற புதிய உத்தரவால் தீர்வு கிடைக்குமா? – நடைமுறையில் உள்ள சவால்கள்

Share

தெருநாய் பிரச்னை, உச்சநீதிமன்றம், தெருநாய் கடி, ரேபிஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் , சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெருநாய்க் கடி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தெருநாய்களால் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள்தான் அதிக பிரச்னைகளைச் சந்திப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பை விமர்சித்து விலங்குநல ஆர்வலரும் பாஜக தலைவருமான மேனகா காந்தி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “இந்தத் தீர்ப்பு முந்தைய தீர்ப்பைவிட மோசமானது. இதைச் செயல்படுத்த முடியாது. ஒருவேளை சாத்தியமெனில் முன்னரே செய்திருக்க முடியும்” என்றார்.

பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி இந்தத் தீர்ப்புதான் சரியான அணுகுமுறையாக இருக்கும் எனக் கூறி வரவேற்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com