துருக்கி: பொலு நகரில் 12 அடுக்குமாடி ஓட்டலில் தீ விபத்து நேரிட்டது எப்படி? என்ன நடந்தது?

Share

துருக்கி பனிச்சறுக்கு ஓட்டலில் தீ விபத்து

பட மூலாதாரம், Getty Images

துருக்கியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர்.

துருக்கியின் பொலு நகரில் உள்ள கிராண்ட் கர்தல் என்ற பனிச்சறுக்கு ஓட்டலில் (தங்குவதற்கு மற்றும் பனிச்சறுக்கு செய்வதற்கான வசதிகளை கொண்ட ஓட்டல்) இன்று அதிகாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மரக்கட்டைகளால் கட்டப்பட்ட அந்த 12 அடுக்குமாடி ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்ட இரவில், அங்கே 234 பேர் தங்கியிருந்தனர். பள்ளி விடுமுறை காலம் என்பதால் பனிச்சறுக்கில் விருப்பம் கொண்ட சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்துடன் அந்த ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர்.

முதலில் 10 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சில மணி நேரத்திற்கு பிறகு துருக்கியின் உள்துறை அமைச்சகம் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை உறுதி செய்தது. இதில் இரண்டு பேர் தீயில் இருந்து தப்பிக்க முயன்று ஓட்டலில் தாங்கள் தங்கியிருந்த தளத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிரிழந்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com