ஒரு நாள் இதை தட்டோட ஹாஸ்டல் வார்டன் சார்கிட்ட காட்டினேன். `நீ போய் வேற ஃபுட் வாங்கி போட்டுக்க’ என்று அலட்சியமாக பதில் கூறினார்.
உணவில் ஏதும் குறைபாடு இருந்தால் ஃபீட்பேக் எழுத சொல்லி யுனிவர்சிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் நோட்டிபிகேஷன் அனுப்பினாலும் மேற்கொண்டு எந்த ரெஸ்பான்ஸும் இருக்காது.
இந்த பிரச்னை யுனிவர்சிட்டிக்கு தெரியும் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கவில்லை.
ஹாஸ்டலும் சரியாக மெயின்டைன் பண்ணாம மேலிருந்து இடிஞ்சு கொட்டுது” என்று அந்த மாணவர் கூறினார்.
அருகில் உள்ள கேரளத்தை சேர்ந்த மாணவி ஒருவர், “அண்ணா நேத்து நைட் சாப்பாடு குவான்டிட்டி ரொம்ப கம்மி அதனால நாங்க வார்டன்டையும் சமைக்கிற அண்ணா, அக்கா கிட்டயும் கூறினோம். ஆனா சரியான ரெஸ்பான்ஸ் பண்ணல.

என்னோட வந்த ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும், இரவு உணவுக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணினோம்.
குட் காண்ட்ராக்ட் எடுத்த அந்த மேனேஜர் வந்து தான் சாப்பாடு ரெடி பண்ணினார்கள் அதுவும் அவசர அவசரத்துல மெனுக்கு உள்ள சாப்பாடு இல்லை.
இந்த மாதிரி குவாண்டிட்டி, குவாலிட்டி குறைவா சாப்பிடுறதால எங்களுக்கு ஸ்டொமக் பெயின், பீரியட்ஸ், ஃபுட் பாய்சன் இதுபோல பிரச்னை நிறைய வருது.
எஸ்சி, எஸ்டி ஸ்டூடண்டுக்கு ஹாஸ்டல் ஃப்ரீ என்கிற ரூல் இருக்கிறப்போ காலேஜ் அண்ட் மெஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டினால் தான் ஹாஸ்டல் அலாட் பண்ணுவோம்னு எங்கள போர்ஸ் பண்றாங்க” என்று தனது வேதனையை தெரிவித்தார்.
இது குறித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீ பிரபஞ்ச் அவர்களிடம் விசாரித்தோம் “மாணவர்களின் தற்போதைய உணவு பிரச்னை சம்பந்தமாக எனது கவனத்திற்கு வரவில்லை. உணவு தொடர்பான பிரச்னை இருக்கும் இடத்தில் கூடிய விரைவில் சரி செய்யப்படும்” என்று அவர் கூறினார்
இந்த பல்கலைக் கழகத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.