திருவண்ணாமலை கோவிலில் அதிகரிக்கும் பக்தர்கள் வருகையை சமாளிக்க போதிய வசதிகள் உள்ளனவா? பிபிசி தமிழ் கள ஆய்வு

Share

திருவண்ணாமலை, கிரிவலம், ஆந்திர பக்தர்கள், அருணாச்சலேஸ்வரர் கோவில்

பௌர்ணமி நாள் வந்துவிட்டாலே தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பௌர்ணமி தினத்தில் கிரிவலப் பாதையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வலம் வந்ததாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கூறுகிறது.

நெருங்கி வரும் கார்த்திகை தீப தினத்தன்று சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கோவில் நிர்வாகம் கணித்துள்ளது.

ஆனால், திருவண்ணாமலை கோவிலில் அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? கூட்ட நெரிசலை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழ் கள ஆய்வில் தெரியவந்தது என்ன?

கிரிவலப் பாதையில் என்ன நிலவரம்?

திருவண்ணாமலை, கிரிவலம், ஆந்திர பக்தர்கள், அருணாச்சலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலை சூழ்ந்துள்ள மலை சுமார் 2,600 அடி உயரமும் 14 கி.மீ சுற்றளவும் உடையது. இங்கு பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com