திருமணத்தில் ஏற்பட்ட தகராறால், மணமகன் வீட்டாரின் மீசை, தலை முடியை மழித்ததற்காக ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்து மகா பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களின் தலைமையில் கூடும் கூட்டம் தான் மகா பஞ்சாயத்து என்பர். கிராமத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பஞ்சாயத்து முடிவு எடுக்கும். அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது மகா பஞ்சாயத்து. ஏன் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராஜஸ்தான் கரிரி கிராமத்தில் வசிக்கும் ஶ்ரீமான் மகன் கமலேஷுக்கும், ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீமான் தவிர, இரு குடும்பத்தினர் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், திருமண பேச்சு வார்த்தை முடிந்தவுடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அந்த பெண்ணுக்கு வளையல் அணிவிக்கும் விழாவிற்காக (உள்ளூர் முறைப்படி நிச்சயதார்த்தம்) ரோன்சி கிராமத்திற்குச் சென்றனர். ஆனால் அந்த விழாவிற்கு சற்று முன்பு மணப்பெண் பிடிக்கவில்லை என்று மணமகன் வீட்டார் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ரோன்சி கிராமம் அவமானப்பட்டதாக கருதி சம்பவம் நடந்த மறுநாளே மணப்பெண் பிடிக்கவில்லை என்று கூறிய மணமகன் வீட்டார் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரோன்சி கிராம உள்ளூர் தலைவர்கள் மூலம் முடிவு செய்து ஒரு பத்திரத்தாளில் எழுதினர்.