திருப்பரங்குன்றம்: சிக்கந்தர் மலை vs கந்தர் மலை- தற்போது என்ன நிலவரம்?

Share

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு நீக்கப்பட்ட பின்னரும் காவல்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர், தர்கா நிர்வாகிகள்.

இரு தரப்பும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக ஊடகங்களில் பேசியதால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் என்ன நடக்கிறது? தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு கோவில் மற்றும் தர்கா நிர்வாகிகள் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com