திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி – மேகாலயாவில் ஆட்சியமைக்க ஆதரவு

Share

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. மேகாலயாவில் கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஏதுவாக தமது பழைய கூட்டணியை பாஜக புதுப்பிக்கவிருக்கிறது.

இந்த நிலையில், திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாக்கு என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இரட்டை எஞ்சின் அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கூறியுள்ளார்.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 33 இடங்களை கைப்பற்றி பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக 32 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதே நேரத்தில் ஐபிஎஃப்டி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாகாலாந்து

நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவும், அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் 37 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com