திமுக பெரியாருடன் முரண்பட்டாலும் அவரது சித்தாந்தங்களை ஆதரிப்பது ஏன்? ஓர் ஆய்வு

Share

பெரியார் - திமுக

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்துவந்த பிறகு, பெரியாரைக் கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அவரையும் அவருடைய சித்தாந்தங்களையும் தீவிரமாக ஆதரித்தே வந்துள்ளது.

இந்த மாற்றம் ஏற்பட்டது ஏன்? பெரியாரின் சித்தாந்தத்தில் முரண்பாடு இல்லையென்றால், தனியாக கட்சி துவங்கியது ஏன்?

பெரியார் - திமுக
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பெரியார் மற்றும் அண்ணா இடையிலான முரண்பாடு

1949-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மணியம்மையை திருமணம் செய்வது தொடர்பான விவகாரத்தில், பெரியாருக்கும் அண்ணா உள்ளிட்ட திராவிடர் கழகத்தின் பல நிர்வாகிகளுக்கும் இடையில் முரண்பாடு வெளிப்படையாக வெடித்தது. நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையிலும், ஜூலை 9-ஆம் தேதி மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்தார் பெரியார்.

இதையடுத்து 1949 செப்டம்பர் 17-ஆம் தேதி பெரியாரின் பிறந்த நாளன்று, புதிய கட்சியைத் துவங்க சி.என். அண்ணாதுரை உள்ளிட்டவர்கள் முடிவுசெய்தனர். இதற்கு அடுத்த நாள் மாலை ராபின்சன் பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடானது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க. என்ற புதிய கட்சி உருவானது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com