தமிழ் சினிமாவில் ‘வயலின்’ இசையால் நம்மை வருடிய சிறந்த 10 பாடல்கள் எவை?

Share

வயலின்கள் அற்புதமாக ஒலித்த பத்து தமிழ் திரையிசைப் பாடல்கள்

பட மூலாதாரம், Bayshore Records

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ் திரையிசையில் பல பாடல்களில் வயலின்கள் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன. பாடல்களின் பின்னணி இசையாகவும் இரு சரணங்களுக்கு இடையிலும் ஒலித்த வயலின்கள், திரையிசை ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான இசையின்பத்தை வழங்கியிருக்கின்றன.

டிசம்பர் 13ஆம் தேதி சர்வதேச வயலின் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், வயலின் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் திரைப்படப் பாடல்களில் குறிப்பிடத்தக்க 10 பாடல்களின் தொகுப்பு இது.

1. எங்கே நிம்மதி

1964ல் வெளியான ‘புதிய பறவை’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்திருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில், இந்தப் பாடல் உருவாக்கப்பட்டவிதமே பெரும் மலைப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பாடலின் பின்னணியில் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசை, பாடலுக்கு ஒரு மர்ம உணர்வைக் கொடுக்கும். இப்போதும் மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் பாடப்பட்டால், வயலின்கள் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.

2. நிலவே நீ சாட்சி

1970ஆம் ஆண்டில் பி. மாதவன் இயக்கத்தில் வெளியான ‘நிலவே நீ சாட்சி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார். “நிலவே நீ சாட்சி.. நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி” என்று கே.ஆர். விஜயா பாடப் பாட, ஜெய்சங்கர் வயலினை இசைப்பார். அடிப்படையிலேயே மிகவும் இனிமையான, உருக வைக்கும் பாடல் இது. வயலினின் இசை இந்தப் பாடலுக்கு கூடுதல் உயிர்கொடுத்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com