தமிழ்நாட்டில் ரோட் ஷோ ரத்து – நீதிமன்ற உத்தரவு அரசியல் ஆயுதமாக மாறுகிறதா?

Share

நீதிமன்ற உத்தரவை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் முடக்கப்படுகின்றனவா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை ஊர்வலங்களுக்கு (road show) ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியதிலிருந்து, பல அரசியல் தலைவர்களின் சாலை ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடக்கும் விதங்கள் மாறிவிடுமா? நீதிமன்ற ஆணையை வைத்து அரசியல் கட்சிகளின் உரிமைகள் முடக்கப்படுகின்றனவா?

கரூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஊர்வலங்களையும் அரசியல் கூட்டங்களை நடத்த தற்காலிகத் தடைகளை விதித்திருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com