தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை: சென்னை, புதுச்சேரி உட்பட பல மாவட்டங்களில் மிதமான மழை|Tamilnadu weather forecast rain September 20 2025

Share

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது.

தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை படி,

நாளை வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் பெய்யலாம்.

இன்று ஓரளவு மேகமூட்டம், இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை ஓரளவு மேகமூட்டம், இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகிற செப் 22, 23 தேதிகளில், ஓரளவு மேகமூட்டம், லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு.

வருகிற செப் 24, 25 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம், லேசான மழைக்கு வாய்ப்பு.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com