தமிழ்நாட்டில் போராட அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறவில் விரிசலா?

Share

போராட அனுமதி மறுப்பு, கைது: தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையா?

பட மூலாதாரம், Social Media

தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது?

போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து போராட அனுமதி கோரினால் அவை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கட்சிகளும், இயக்கங்களும் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் பல கட்சிகளுக்கும் இதுபோல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் டிசம்பர் 31ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அனுமதி மறுக்கப்பட்டது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினரையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் காவல்துறை கைதுசெய்தது. பத்திரிகையாளர்களிடம் கூட பேசவிடாமல் காவல்துறை கைது செய்து அழைத்துச் செல்வதாக சீமான் குற்றம்சாட்டியிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com