தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ பள்ளிகளை முதலில் ஏற்றுவிட்டு பின்னர் நிராகரித்ததா? முழு பின்னணி

Share

பி.எம்.ஶ்ரீ பள்ளிகள், தமிழ்நாடு - மத்திய அரசு, தர்மேந்திர பிரதான் - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெற, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தேசிய அரசியலில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்படும் பி.எம்.ஶ்ரீ மாதிரிப் பள்ளிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுக்கிறது. பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காததால் சமக்ரா சிக்‌ஷா அபியான் என்ற ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.

பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கும் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிக்கும் சம்பந்தம் இல்லை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என்ற மத்திய அரசின் நிபந்தனை நியாயமற்றது என்று தமிழக அரசு கூறுகிறது.

பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் என்றால் என்ன?

பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com