சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல்துறை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றுள்ளனர்.
மாநிலம் சார்பில் பங்கேற்ற ஒரே மாணவியாக கோகிலவாணி இடம்பெற்றுள்ளார். பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.