டியல்லா: உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் செய்யப்போகும் முக்கிய பணி என்ன?

Share

ஏஐ அமைச்சர், அல்பேனியா, ஐரோப்பிய ஒன்றியம், ஊழல், டியல்லா

பட மூலாதாரம், ADNAN BECI/AFP

படக்குறிப்பு, புதிய ஏஐ அமைச்சர் டியல்லா நீண்ட காலமாகவே பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்.

அரசாங்க அதிகாரிகள் “இதயமற்றவர்கள்” என்ற அவமதிப்பை அடிக்கடி எதிர்கொள்வார்கள். ஆனால் அல்பேனியா இந்த அவமதிப்பை ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அமைச்சரை நியமிப்பதன் மூலம் இந்த நேர்மறையான விஷயமாக மாற்றியுள்ளது.

ஏஐ-க்கான அமைச்சர் அல்ல, மாறாக முழுக்க முழுக்க ஏஐ-யால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சர். இந்த புதிய அமைச்சரின் பெயர் டியல்லா.

மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் எடி ரமா, டியல்லாவை அமைச்சரவையின் புதிய உறுப்பினராக அறிமுகம் செய்தார்.

எனினும், இந்த நகர்வு அடையாள ரீதியானது தானே தவிர, அதிகாரப்பூர்வமானது அல்ல. ஏனெனில் அல்பேனியாவின் அரசியலமைப்பின்படி அரசாங்க அமைச்சர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com