ஜூனியர் ரோல் பால் இந்திய அணி சாம்பியன் | Junior Roll Ball Indian Team Champion

Share

புதுடெல்லி: முதலாவது ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த போட்டி கென்யாவின் நைரோபி நகரில் கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா, கென்யா, இலங்கை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் இந்தியாவும், கென்யாவும் மோதின. இதில் இந்திய அணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கென்ய அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்திய அணியில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏ.ஒய்.அக்‌ஷயா நந்தினி இடம்பெற்றிருந்தார். கோப்பையைக் கைப்பற்றிய பின்னர் அவர் நேற்று பிற்பகல் சென்னைக்கு வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ரோல் பால் சங்க நிர்வாகிகள், அக்‌ஷயா நந்தினிக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com