ஜப்பானில் ஒரு குட்டிப் பாம்பு புல்லட் ரயில் சேவையை ஸ்தம்பிக்க வைத்தது எப்படி?

Share

ஜப்பானில் புல்லட் ரயில் சேவையை ஸ்தம்பிக்க வைத்த ஒரு குட்டிப் பாம்பு

பட மூலாதாரம், Getty Images

ஜப்பானின் மிகவும் பரபரப்பான புல்லட் ரயில் பாதைகளில் ஒன்றின் மின் கம்பியில் பாம்பு சிக்கிக் கொண்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

டோக்கியோ மற்றும் ஒசாகா இடையே இயங்கும் டோகைடோ ஷின்கான்சென் ரயில் சேவை, புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும், மாலை 7 மணிக்கு புல்லட் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் இப்போது கோல்டன் வீக் எனப்படும் பரபரப்பான விடுமுறைக் காலம். இந்த ஒரு வாரத்தில் நான்கு தேசிய விடுமுறைகள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் ரயில்களும், விமானங்களும் நிரம்பி வழியும், விடுமுறை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒசாகாவில் இந்த ஆண்டு உலகளாவிய கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அக்டோபரில் இந்த உலகக் கண்காட்சி முடியும் வரை லட்சக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பார்வையாளர்கள் நகரத்திற்கு வந்து செல்வார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com