சைஃப் அலி கான்: அடையாளம் தெரியாத நபர் கத்தியால் தாக்கினார்; மருத்துவமனையில் அனுமதி

Share

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்தி குத்து

பட மூலாதாரம், Getty Images

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மும்பையில் அவரது வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

இன்று (ஜன. 16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பை பாந்த்ரா குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சைஃப் அலி கானின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரி தீக்ஷித் கோடம் பிபிசி மராத்தியிடம், “சைஃப் அலி கானின் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர் நுழைந்தார். அதன் பிறகு, சைஃப் மற்றும் இந்த நபருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், சைஃப் அலி கான் காயமடைந்துள்ளார், அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

ஒருவர் சைஃப் அலி கானின் வீட்டுக்குள் நுழைந்து அவரது வீட்டு உதவியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் அப்போது , சைஃப் அலிகான் தலையிட முயன்றபோது, அந்த நபர் அவரைத் தாக்கினார் என்றும் மும்பை காவல்துறை கூறியதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ குறிப்பிடுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com