சுறா துடுப்பு கடத்தல்: இந்தியாவில்தான் கழிவு, வெளிநாடுகளில் எகிரும் விலை – ஏன் தெரியுமா?

Share

சுறா துடுப்பு கடத்தலில் தமிழ்நாடு முதலிடம்: 'ஒரே மாதத்தில் 2 சம்பவங்கள்' - அதிர்ச்சிப் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுறா மீன்களின் உடல் பாகங்களில் 65 சதவிகிதம் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, உலக காட்டுயிர் நிதியம் (WWF) கூறியுள்ளது.

இந்தியாவில் கழிவாகப் பார்க்கப்படும் சுறா துடுப்புகளுக்கு உலக சந்தையில் வரவேற்பு கிடைப்பதால் கடத்தல் தொடர்வதாக, காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறுகிறார். சுறா துடுப்பு கடத்தல் அதிகரிப்பது ஏன்?

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு யானைத் தந்தத்தைக் கடத்த முயன்றதாக, டிசம்பர் 7-ஆம் தேதியன்று மூன்று பேரை கடலோர பாதுகாப்புப் பிரிவு (Coastal security group) கைது செய்தது.

இவர்களில் ஒருவர் கடல் வழியாக யானைத் தந்தம், சுறா துடுப்பு ஆகியவற்றைக் கடத்தும் முகவராகச் செயல்பட்டு வந்ததாக, கடலோர பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com