மருந்தின் லேபிளில் அது எப்போது தயாரிக்கப்பட்டது, அதன் காலாவதி தேதி, என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தால், பயமின்றி பயன்படுத்தலாம்.
அலோபதியில் போலி மருத்துவர்கள் உள்ளதுபோல சித்த மருத்துவத்திலும் இருக்கிறார்கள்.
டாம்ப்கால், இம்ப்காப்ஸ் போன்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, மருந்துகள் லேபிளுடன் வரும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தரக்கட்டுப்பாட்டையும் பின்பற்றியிருப்பார்கள் என்று நம்பலாம்.
எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், மருந்து தயாரிப்பில் ஏமாற்று வேலைகளைச் செய்வோரிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வோம். அதில் முறையாகச் சேர்க்க வேண்டிய பொருள்களை, சரியான பக்குவத்தில் சேர்க்க வேண்டும். ஆனால், சந்தனம் விலை அதிகம் என்பதால் அதைச் சேர்க்காமல் விடுவோரும் இருக்கிறார்கள்.
இதுபோல விலை அதிகம் என்பதற்காக, அவசியமான பொருள்களையே தவிர்ப்பது போலி மருத்துவர்களிடம் நடக்கும். அப்படித் தயாராகும் மருந்துகள் நமக்குப் பலன் கிடைக்காது. அதேபோல, போலி மருத்துவர்களாக இருப்போர், விலை மலிவான, சாதாரண சித்த மருந்தைக் கூட பல மடங்கு விலை வைத்து விற்பார்கள். அவர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.