சண்டை நிறுத்தம்: இந்தியா – பாகிஸ்தான் திரைமறைவு பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் பங்கு என்ன?

Share

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் கூடிய மக்கள் கூட்டம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் கூடிய மக்கள் கூட்டம்

  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ், விகாஸ் பாண்டே
  • பதவி, பிபிசி செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில் முக்கியத் திருப்பமாக, இரு நாடுகளுக்கும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

நான்கு நாட்கள் தொடர்ந்த பதற்றமான எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு “முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு” இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதனத்தை ஏற்படுத்துவதில் பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இருப்பினும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அது மீறப்பட்டதாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டன. இது உடன்பாட்டின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com