கோவை: விதி மாற்றத்தால் விலை போகும் பொது பயன்பாட்டு நிலங்கள்! – தமிழ்நாடு அரசுக்கு எதிரான பொதுநல மனு ஏன்?

Share

பூங்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம் போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் 10 சதவீத இடங்களை, அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தது.

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

‘தமிழகத்தில் நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறுவதைத் தடுப்பதற்கு, பொது ஒதுக்கீட்டு இடங்களை அரசே விற்கும் விதிமுறையை மாற்ற வேண்டும்’ என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலமனுவின்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று தமிழக வீட்டுவசதித்துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நகர ஊரமைப்புச் சட்டம் 1971ன்படி, தமிழகத்தில் புதிதாக மனைப்பிரிவு (Lay out) அமைப்பதற்கான தொழில்நுட்ப அனுமதி பெறுவதற்கு, சாலைகளுக்கான இடங்கள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய (OSR-Open Space Reserves) 10 சதவீத திறந்தவெளி இடங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் தானப்பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளின்படி 2500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில், மக்கள் பயன்பாட்டுக்குரிய பொது ஒதுக்கீட்டு இடங்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பது கட்டாயமாக இருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com