“இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறது” என் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கொரோனா வைரஸ் பரவலை இப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று தொடங்கிய மூன்று ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. தற்போது ஒமிக்ரானிலிருந்து உருமாறிய XBB.1.5 வைரஸால் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோவிட் குறித்து சௌமியா சுவாமிநாதன் பேசியிருக்கிறார். “கோவிடை பொறுத்தவரை இந்தியா சற்று பாதுகாப்பான நிலையில்தான் உள்ளது. இதனால் அதிக பயமடையத் தேவையில்லை. அதிக எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் உருமாறும் புதிய வைரஸ், தடுப்பூசி செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றிருந்தாலும் தொற்றுவதற்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது. எனவே, உருமாறும் வைரஸ் குறித்த தொடர் கண்காணிப்பு அவசியம்.