இரண்டாம் சுற்றில் பங்கேற்றவர்களுக்குப் பூண்டு களி, இடியாப்ப பிரியாணி, மீன் குழம்பு, பூசணிக்காய் அல்வா, மண்பானை சமையல் போன்ற பாரம்பரிய உணவுகளைச் சமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட 10 போட்டியாளர்கள் நேரடி சமையலுக்கு தேர்வாகினர்.
இறுதிப் போட்டியில் ஒரு மணி நேரத்திற்குள் பங்கேற்பாளர்கள் ரவா பாயசம், பன்னீர் சூப், கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம், சிக்கன் வறுத்து அறைச்ச கறி போன்ற உணவுகளைச் சமைத்துக் களமிறங்கினர்.
செஃப் தீனா சிறப்பாக சமையல் செய்த ஸ்ரீமதி, சயீத் அலி பாத்திமா, ஷெரின் லத்தீப் ஆகிய மூவரை வெற்றியாளர்களாகத் தேர்வு செய்தார். இறுதிச் சுற்றில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.